ஆன்மீக ஆரமுது

நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்;
பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.

(நீதிமொழிகள் 10 :20)

அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப்
போவோம்.

(திருப்பாடல் 122 :1)

 சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால்
அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை,
மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி
தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம்
கொண்டார்.

(கொலோசையர் 1: 20)

ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு
போற்றப்பெறுக!

(மாற்கு 11: 10 )